குழந்தை சருமப் பராமரிப்பில் இயற்கை செரமைட்கள் ஏன் அவசியமாகின்றன?

உங்கள் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு பெரும்பாலும் சிறிய தினசரி பழக்கங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒரு நாளின் முடிவில் ஒரு இதமான குளியல், மென்மையான துவாயால் துடைத்தல், உறங்குவதற்கு முன் ஒரு மென்மையான மசாஜ் – இவை அனைத்தும் சாதாரணமான தருணங்களாக தோன்றலாம். ஆனால் ஒரு தாய்க்கு, இவை மிகவும் அர்த்தமுள்ள தருணங்கள். இவை வெறும் பராமரிப்பு செயல்கள் அல்ல; உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற அமைதியான அன்பின் வெளிப்பாடுகள்.

என் குழந்தை பிறந்தபோது, அவளது சருமம் எவ்வளவு மென்மையானது என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். சிறிதளவு வரண்ட நிலை கூட அவளது சருமத்தில் சிவந்த நிலையை ஏற்படுத்தும். வானிலை மாறினால் கன்னங்கள் வரண்டதாக மாறும். மிகவும் மென்மையான துணிகள் கூட சில நேரங்களில் அவளது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்துவது போல தோன்றும்.

இந்த அனுபவங்கள், நான் பயன்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பையும் குறித்து அதிக கவனத்துடன் சிந்திக்கச் செய்தன. இனிமேல் நான் வெறும் சவர்க்காரம் அல்லது கிரீம் மட்டும் தெரிவு செய்வதில்லை; அவளது சருமத்தைத் தொடும் ஒவ்வொரு பொருளும், அவளது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் என்பதை உணர்ந்து தேர்வு செய்ய ஆரம்பித்தேன்.

காலப்போக்கில், குழந்தையின் சருமம் பெரியவர்களின் சருமத்தைப் போல வலுவானதல்ல. அது இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். அதனால் அது ஈரப்பதத்தை விரைவாக இழக்கக்கூடியதும், மிகவும் உணர்திறன் மிக்கதுமாக இருக்கும்.

பெற்றோர்களாக நாம் அன்புடன் அனைத்தையும் செய்தாலும், குழந்தையின் சருமம் அசௌகரியமாக இருக்கும் போது நாம் உதவ முடியாமல் இருப்பது போல உணரப்படலாம்.

அப்போது தான் நான் முதன்முதலில் இயற்கையான Ceramides (செரமைட்கள்) பற்றி அறிந்தேன். அது ஒரு சிக்கலான விஞ்ஞான சொல் போல அல்லாமல், குழந்தையின் சருமம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய கூறாக எனக்கு விளக்கப்பட்டது.

Ceramides என்பது சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை உருவாக்கும் இயற்கையான கொழுப்பு (lipids) வகையைச் சேர்ந்த கூறுகள். இவை சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து, வெளிப்புற எரிச்சலூட்டும் காரணிகளிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.

பெரியவர்களில் இந்த பாதுகாப்பு அடுக்கு ஏற்கனவே வலுவாக உருவாகியிருக்கும். ஆனால் குழந்தைகளில் அது இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதால், அவர்களின் மென்மையான சருமத்திற்கு ceramides ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியமானதாகும். இது சருமம் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

என்னை மிகவும் ஆறுதலடையச் செய்த ஒரு விஷயம் என்னவென்றால், ceramides என்பது சருமம் வரண்ட பிறகு அதை சீர்செய்வதற்காக மட்டுமல்ல; அந்த வரட்சியே ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. அவை தினமும் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. ஒரு வகையில், என்னால் தனியாக வழங்க முடியாத ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை என் குழந்தைக்கு வழங்குவது போல எனக்குத் தோன்றியது.

மேலும் தேடியபோது, இயற்கையான ceramides பெரும்பாலும் அரிசி மற்றும் தாவர எண்ணெய்களிலிருந்து பெறப்படுகின்றன என்பதை அறிந்தேன். குழந்தைகளின் சருமத்தில் இயற்கையாகவே இருக்கும் கூறுகளுக்கு மிகவும் ஒத்த தன்மை கொண்டதால், இவை மிகவும் மென்மையாகவும், பாதுகாப்பாகவும் உணரப்படுகின்றன.

இது வெளிச் சூழலுக்கு மெதுவாக பழகிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் சருமத்திற்கு மிகவும் ஏற்றதாகும்.

குழந்தையின் சரும பராமரிப்பு என்பது வெறும் பிரச்சினைகளைச் சீர்செய்வதற்காக மட்டுமல்ல. அது புதிதாக பிறந்த குழந்தையின் சருமத்தை பாதுகாக்கும் ஒரு முக்கியமான வளர்ப்பு செயலாக மாறுகிறது. ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் சருமத்துடன் இணைந்து செயல்படும் தயாரிப்புகளை தெரிவு செய்வது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள். இது அன்றாடத்தில் எடுக்கப்படும் சிறிய ஆனால் அர்த்தமுள்ள முடிவுகளின் மூலம் உங்கள் குழந்தையின் நீண்டகால சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகும்.

ஒரு தாயாக, குழந்தைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை தயாரிக்கும், கடுமையான தரநிலைகளை பின்பற்றும் நம்பகமான நிறுவனங்களின் தயாரிப்புகள் வழங்கும் நிம்மதி வேறுபட்டதாக இருப்பதை நான் உணர்ந்தேன்.

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதும், எளிதில் பாதிக்கப்படக்கூடியதும் என்பதால், இத்தகைய நிறுவனங்கள் பாதுகாப்பு தரநிலைகளை கடுமையாக பின்பற்றுகின்றன. அவை மென்மையான மூலப்பொருட்களை கவனமாகத் தெரிவு செய்து, விரிவான சோதனைகளின் மூலம் தயாரிப்புகளை உருவாக்குகின்றன.

ஒரு தயாரிப்பு Dermatologically tested செய்யப்பட்டதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தயாரிக்கப்பட்டதாகவும், குறிப்பாக குழந்தைகளின் சருமத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும் அறிந்திருப்பது பெற்றோருக்கு ஒரு மனநிம்மதியை அளிக்கிறது.

அது நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்பு பாதுகாப்பானதும், மென்மையானதும், உங்கள் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுமானது என்ற நம்பிக்கையை தருகிறது. உண்மையில், உங்கள் குழந்தையின் சருமத்தைப் பராமரிப்பது என்பது அன்பின் மற்றொரு வடிவமாகும்.

இயற்கையான Ceramides கொண்ட தயாரிப்பை தெரிவு செய்வது போன்ற எளிய முடிவுகள் கூட, உங்கள் குழந்தையின் மென்மையையும் ஆறுதலையும் பாதுகாக்க உதவுமானால், அது “உனக்கு நான் சிறந்ததையே விரும்புகிறேன்” என்று சொல்லும் ஒரு சிறிய ஆனால் அர்த்தமுள்ள வழியாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *