புதிய தயாரிப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ள சுதேஷி கொஹொம்ப”சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரம்”

இலங்கையின் முதலிடத்தில் உள்ள மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேஷி கொஹொம்ப, அதன் தயாரிப்பு வரிசையில் புதிய உற்பத்தியான “சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரத்தை” அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரமானது, இயற்கையான எலுமிச்சை புல் (Lemongrass) சாறுடன் வேம்பின் இயற்கைச் சாறையும் ஒருங்கிணைத்து, சருமத்தை புத்துணர்ச்சியாகவும், பொலிவுடனும், துர்வாடைகள் இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. லெமன்கிராஸ் ஆனது, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, சருமத்தின் இயற்கையான துளைகளின் அடைப்புகளை நீக்கி, நச்சுத்தன்மைகள் நீங்க உதவுகிறது. அதே நேரத்தில் வேம்பானது காலத்தால் அழியாத பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. வேம்பை (கொஹொம்பவை) இத்தயாரிப்புடன் இணைத்திருப்பது சுதேஷியின் பாரம்பரியத்திற்கான ஒரு அங்கீகாரமாகும். ஏனெனில், இது இவ்வர்த்தகநாமத்தின் சின்னமான சுதேஷி அசல் கொஹொம்ப தயாரிப்புகளின் அடிப்படையாக விளங்குகின்றது. தூய்மை, பாரம்பரியம், சருமப் பராமரிப்பில் சிறந்து விளங்குவதற்கான தனது அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது உறுதிப்படுத்துகிறது.

தற்போது சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரம், கவர்ச்சிகரமான நீல நிற (aqua blue) உறையில், சந்தையில் ரூ.100/- எனும் கட்டுப்படியான விலையில், சுதேஷி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அத்துடன் அதன் தாய் வர்த்தகநாமமான சுதேஷி கொஹொம்ப மூலிகை சவர்க்காரம், 1943 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, மூலிகைப் பிரிவில் தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது. மேலும் இது மிருதுவான, ஆனால் ஆழமான தூய்மைப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது இயற்கையான அழகை மேலும் மேம்படுத்துவதோடு, இயற்கையான பாதுகாப்பையும் வழங்குகிறது. சுதேஷி கொஹொம்ப மூலிகை சவர்க்காரமானது, தோலில் மிருதுவாக செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச அளவிலான தோல் மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்டுள்ளது.

சுதேஷியானது, நாட்டின் முன்னணி தனிநபர் மூலிகை பராமரிப்பு உற்பத்தி நிறுவனம் எனும் வகையில் அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகளைப் பற்றி நுகர்வோர் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறது. இந்நிறுவனம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துவதோடு, அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, தரத்தை உறுதி செய்ய முழுமையாக சோதிக்கப்படுகின்றன. அத்துடன் எமது அனைத்து தயாரிப்புகளும் 100% சைவத்தை அடிப்படையாக் கொண்டுள்ளதோடு, அவை விலங்குக் கொடுமைகளிலிருந்து விலக்கப்பட்டவையாகும்.

சுதேஷி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேஷி கொஹொம்ப பேபி உள்ளிட்ட சுதேஷி தயாரிப்புகள் யாவும், Vegetarian Society, UK அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இது நிறுவனத்தின் தொலைநோக்கு நடைமுறைகளுக்கும், நுகர்வோர் நெறிமுறை மற்றும் சூழலுக்கு உகந்த தெரிவுகளைச் செய்ய உதவுவதற்கான எமது விருப்பத்திற்கும் ஒரு சான்றாகும். நிறுவனம் எப்போதும் அதன் தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தையும் கருத்தில் கொண்டுள்ளதோடு, அவற்றிற்கு தொடர்ச்சியாக முன்னுரிமை அளித்து வருகிறது. முழுமையான ஒரு இலங்கை நிறுவனமான சுதேஷி, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் பல்வேறு முதலாவது சாதனைகளுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

இலங்கையில் தனிநபர் மூலிகை பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தை முன்னணியாளருமான சுதேஷி இன்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி (Swadeshi Industrial Works PLC), 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேஷி வர்த்தகநாம உற்பத்தியில் சுதேஷி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேஷி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப் பிளஸ், பிளக் ஈகிள் பேர்பியூம், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிரீம் வகைகள் அடங்குகின்றன. இந்நிறுவனம் இலங்கையில் முதலிடத்தில் உள்ள மூலிகை வர்த்தகநாமமான “கொஹொம்ப ஹேர்பல்” மற்றும் பாரம்பரிய அழகுசாதன வர்த்தகநாமமான ராணி சந்தன சவர்க்காரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து சுதேஷி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேஷி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட International Fragrance Association (IFRA) இனால் சான்றளிக்கப்பட்டவை என்பதோடு, ISO 9001 – 2015 தரநிலைகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *