2022 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜனசக்தி லைஃப்

ஜனசக்தி லைஃப் (Janashakthi Life) அதன் வரலாற்றில் முதன்முறையாக ‘Best Life Insurer Sri Lanka 2022’ (2022ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்) என உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Capital Finance International (CFI.co) அமைப்பினால் வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்குகின்றதும், அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பு சேர்க்கின்றதுமான நிறுவனங்களை அடையாளம் காட்டுகிறது. இலண்டனில் உள்ள House of Lords இல் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில், ஜனசக்தி லைஃப் உள்ளிட்ட விருது பெற்ற அனைத்து உலகளாவிய வர்த்தக நாமங்களுக்கும் விருது வழங்கப்பட்டன. பல்வேறு சுற்றுகள் மூலம் கடுமையான நடுவர் நடவடிக்கைகள் மற்றும் விரிவான மதிப்பீட்டுச் செயன்முறை மூலமும், இறுதிப் படியாக நடுவர் குழுவின் ஊடாடல் நியாயப்படுத்தல்களைத் தொடர்ந்து, விருதுகள் தெரிவு செய்யப்படுவதால், இவை பெரிதும் விரும்பப்படும் விருதுகளாக கருதப்படுகின்றன. மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சேவை விசேடத்துவத்துடன் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் ஜனசக்தி லைஃப், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறைக்கு வழங்கிய குறிப்பிடும்படியான பங்களிப்பிற்கு இந்த அங்கீகாரம் ஒரு சான்றாகும்.

இந்த சாதனை குறித்து ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரமானது எமது காப்புறுதியாளர்களுக்கு சிறந்த நுகர்வோர் பெறுமதியையும் ஈடுபாட்டையும் வழங்குவதன் மூலமும் எமது நோக்கத்தைப் பேணுவதன் மூலமும் சேவை செய்வதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் சவாலான ஆண்டிற்கு மத்தியில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப் பாரிய பங்களிப்பை வழங்கிய எமது சிங்கப் படையின் திறமைக்கும் இது ஒரு சான்றாகும். புத்தாக்கமான தீர்வுகள் மூலம் இலங்கையில் ஆயுள் காப்புறுதியை நாம் மாற்றியமைத்துள்ளோம். வாடிக்கையாளர் அனுபவத்தை பாரிய அளவில் மேம்படுத்தும் வகையில் எமது தயாரிப்புகளை நாம் டிஜிட்டல் மயமாக்கியுள்ளோம்.” என்றார்.

ஜனசக்தி லைஃப் ஆனது, வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல் ஆகிய தனது கூட்டாண்மை நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் நெறிமுறை மற்றும் வெளிப்படையான தன்மையின் மூலம் அதிக மதிப்பை வழங்க எப்போதும் பாடுபடுகிறது. ஒரு காப்புறுதி வழங்குனர் எனும் வகையில், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் இது உயிர்ப்பிக்கப்படுகிறது. இந்த நோக்கத்தை தனது ஊழியர்களுடனான தனது ஈடுபாட்டிற்கு விரிவுபடுத்தும் வகையில், ஜனசக்தி லைஃப் எப்போதும் அதன் ஊழியர்களுக்கு அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வளர்த்துக்கொள்ளவும், அதனை நனவாக்கவும் உதவுகின்ற, அவர்களுக்கு உச்ச ஆதரவை வழங்குகின்ற பணிச்சூழலை வழங்க முயற்சி செய்து வருகிறது.

இலங்கையின் சிறந்த 100 மதிப்புமிக்க மற்றும் வலுவான வர்த்தக நாமங்கள் பற்றிய சமீபத்திய Brand Finance அறிக்கையில், மிக வேகமாக வளர்ந்து வரும் இலங்கை வர்த்தக நாமங்களில் ஒன்றாக TOP 10 வர்த்தகநாம தரவரிசையில் Janashakthi Insurance PLC ஆனது நுழைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த வர்த்தகநாம மதிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்ததன் மூலம், இந்த வர்த்தகநாமமானது ‘TOP 10 Fastest Growing Sri Lankan Brands’ (அதிவேகமாக வளரும் இலங்கை வர்த்தகநாமங்களில் முதல் 10 இடங்களில்) ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் A+ மதிப்பீட்டுடனும் வர்த்தகநாம வலிமைக் குறியீடு  புள்ளி 569 (Brand Strength Index – BSI) உடனும் முதல் 10 இடம் எனும் கௌரவப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரேயொரு காப்புறுதி வர்த்தகநாமமாகவும் இது விளங்குகின்றது.

பிராந்தியத்தின் காப்புறுதித் தொழில்களை, தொழில்துறையில் சிறந்த தீர்வுகளுடன் மாற்றியமைத்தமை தொடர்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற 3ஆவது ICC Emerging Asia Insurance Awards 2021 (ஐசிசி வளர்ந்துவரும் ஆசிய காப்புறுதி விருதுகள் 2021) இல், 2021 ஆம் ஆண்டிற்கான ‘Best Strategies for Insurance Spreading’ (காப்புறுதி பரவலுக்கான சிறந்த மூலோபாயங்கள்’ விருதை இம்முன்னணி காப்புறுதி நிறுவனம் வென்றுள்ளது. அத்துடன், ஜனசக்தி லைஃப் ஆனது, ‘Domestic Insurer of the Year’ (வருடத்தின் உள்நாட்டு காப்புறுதி நிறுவனம்) ஆக உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, ஜனசக்தி லைஃப் கையடக்கத் தொலைபேசி செயலியானது, Insurance Asia Awards 2022 யில் ‘Mobile App of the Year’ (வருடத்தின் சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலி) எனும் விருதை பெற்றுள்ளது, காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வெளியீட்டாளருமான புகழ்பெற்ற இன்சூரன்ஸ் ஏசியா, இவ்விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இன்சூரன்ஸ் ஏசியா விருதுகள் ஆனது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறந்த காப்புறுதி நிறுவனங்களுக்கான மிகவும் பாராட்டப்படும் விருதுகள் திட்டமாக அறியப்படுகின்றது. இந்த நற்சான்றிதழானது, காப்புறுதித் துறையில் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரமாக பரவலாகக் கருதப்படுவதோடு, கடுமையான ஆய்வு மற்றும் தெரிவுச் செயன்முறையை உள்ளடக்கியதாகும்.

நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவு மற்றும் ஜனசக்தி நிறுவனத்தின் ஊழியர்களான அதன் சிங்கப் படையின் செயற்றிறன் சார்ந்த கலாசாரத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தரத்திற்கு இணையாக 100 MDRT சாதனையாளர்களை நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. Janashakthi Insurance PLC ஆனது தனது ஊழியர்களை வலுவூட்டும் அதே வேளையில், சாதகமான மதிப்புமிக்க கலாசாரத்தை வளர்க்கும் வகையிலான அதன் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், அதன் பெறுமதியான மற்றும் நெகிழ்ச்சியான பணியிட கலாசாரத்திற்காக, இலங்கையில் சிறந்த பணியிடமாகவும் (Great Workplace in Sri Lanka) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தனது 27 வருட கால பயணத்தில், Janashakthi Life PLC ஆனது, காப்புறுதித் துறையில் தொடர்ந்தும் புரட்சியை ஏற்படுத்தி வருவதுடன், குறிப்பிடும்படியான ஒரு சக்தியாக முன்னோக்கி பயணித்து வருகின்றது. அதன் நாடளாவிய ரீதியிலான 75 இற்கும் அதிக கிளைகளின் வலையமைப்பானது, அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் தனித்துவமான காப்புறுதி தீர்வுகளை அணுக வழிவகுக்கிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *